திருக்கோவிலூரில் மது பாட்டில்களை ஏற்றி வந்த சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 10 May 2024

திருக்கோவிலூரில் மது பாட்டில்களை ஏற்றி வந்த சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து.


திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானங்களை ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெயராமன் அரசு மதுபானங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு மன்னார் குடியிலிருந்து திருக்கோவிலூர் வழியாக திருவண்ணாமலையை நோக்கி சென்றார். திருக்கோவிலூர் சந்தப்பேட்டை புற வழிச்சாலை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த லாரி நிலைத்தடுமாறி, சாலை அருகே தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த பெரும்பாலான மதுபாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன.
மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி முழுவதும் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்ததால், விபத்துக்குள்ளான லாரியானது மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி என்று யாருக்கும் தெரியவில்லை. இதனால் லாரியில் இருந்த மது பாட்டில்கள் மது பிரியர்களிடம் இருந்து தப்பின.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் நந்தகோபால் தலைமையிலான போலீசார், விபத்துக்குள்ளான லாரியில் இருந்த மது பாட் டில்களை மாற்று லாரியில் ஏற்றி திருவண்ணாமலைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad