கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் இன்று தனது அலுவலகத்தில் பாராட்டு தெரிவித்தார். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 9 September 2023

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் இன்று தனது அலுவலகத்தில் பாராட்டு தெரிவித்தார்.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்  இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமாரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022-2023ஆம் கல்வி ஆண்டுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் ஆசிரியர் தினமான 05.09.2023 அன்று நடைபெற்றது.

இவ்விழாவில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.தண்டபாணி, வடதொரசலூர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.துரைசாமி, சித்தலூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஞானசேகரன், திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மு.வில்வபதி ஆகியோரும், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளிலிருந்து கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞான.சத்தியமூர்த்தி, கச்சிராயபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சுமதி, நைனாக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மா.முருகேசன், சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் என்.ராஜேந்திரன் ஆகிய ஆசிரியர்களுக்கும், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா பள்ளி முதல்வர் செல்வி.அ.சந்திரா என்ற ஆசிரியருக்கும் என ஆக மொத்தம் 9 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி, வெள்ளிப் பதக்கம் அணிவித்து தலா ரூ.10,000/- ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்திருந்தார்.

இவ்விருது பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமாரை இன்றைய தினம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் விருது பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வித் துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட ஆசிரியர்கள் பாடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா, மாவட்டக் இடைநிலை கல்வி அலுவலர்  எல்.ஆரோக்கியசாமி, மாவட்ட தொடக்க கல்வி  கல்வி அலுவலர் பொ.ஜோதிமணி, மாவட்டக் தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் ஜே.துரைராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ம.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad