கொலை வழக்கில் இருவருரை ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 28 April 2023

கொலை வழக்கில் இருவருரை ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,


கொலை வழக்கில் இருவருரை ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, 


கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்ஸ்ரீ (19) த/பெ ஜெய்சங்கர் என்பவரை கடந்த 24.03.2023-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த 1.அய்யப்பன் (31) த/பெ அங்கமுத்து மற்றும் 2.ஆகாஷ் (20) த/பெ மணிகண்டன் என்பவர்கள் முன்விரோதத்தால் கொலை செய்து கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்த வழக்கில் வரஞ்சரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், இனி வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர்கள் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ்பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் மேற்படி குற்றவாளிகளை கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad