கள்ளக்குறிச்சியை காசநோய் இல்லா மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 26 March 2023

கள்ளக்குறிச்சியை காசநோய் இல்லா மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள்.


கள்ளக்குறிச்சியை காசநோய் இல்லா மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள். 

                     

கள்ளக்குறிச்சியை காச நோய் இல்லா மாவட்ட மாக உருவாக்கிட அனை வரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள் ளார்.



உலக காசநோய் தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார் பில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட காச நோய் துணை இயக்குனர் சுதாகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் அனைவரும் தேசிய காசநோய் ஒழிப்புதின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். 



தொடர்ந்து காசநோய் பரிசோதனை கரு விகளை அரசு மருத்துவமனைக்காக டாக்டர்களிடம் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து காசநோய் உதவி போன் நம்பருடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகளை திறந்து வைத்ததோடு, காச நோயால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். மேலும் சிறப்பாகபணியாற்றி டாக்டர்கள், மருத்துவமனை நிர்வாகத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.



ஊட்டச்சத்து உணவுகள் அதனை தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் வாகனம் மூலம் வீட்

டிற்கு சென்று பொதுமக்காள பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காச நோயால் பாதிக்கப்பட்டவர். என்ஊட்டச்சத்து உணவுகள் எடுத்துக்கொள்வதற்கும், மருந்து எடுத்துக்கொள்வதற் கும் முதல் ரூ.500 வழங்கப்படுகிறது. 


எனவே கள்ளக் குறிச்சி மாவட்டம் காசதோய் இல்லா மாவட்டமாக உருவாக்கிட அனைத்து தரப்பினரக்கும் முழு ஒத்துழைப்பு வழங் கிடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து 8 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 208 ஆம்புலள்ஸ் ஓட்டுனர் சரவணனின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ5 வட் சத்திற்கான காசோலையை வழங்கினார். 


இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப் பாளர் நேரு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்ராஜா, ஏ.ஆஃடிமையம் அலுவலர் டாக்டர்சாமுண்டீஸ்வரி, ரோட்டரி சங்க தலைவர் மூர்த்தி செயலாளர் பாலகிருஷ்ணன், காச நோய் மருத்துவ அலுவலர் டாக்டர் பொய்யாமொழி, 108 ஆம்புலன்ஸ் ஊர்தி மேலாளர் அறிவுக்கரசு மற்றும் டாகடர்கள். காசநோய் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad