கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 5 December 2022

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி.


கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலத்தில் புத்தக கண்காட்சி வருகிற ஒன்பதாம் தேதி முதல் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

புத்தக கண்காட்சி நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நூலகத்துறை மின் சார்பில் புத்தக கண்காட்சி நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.


மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது 10 நாட்கள் நடக்க இருக்கும் புத்தக கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் புத்தக வாசிப்பு ஒரு இயக்கமாக கொண்டு செல்வத்திற்காக மாவட்டம் தோறும் சென்னையில் புத்தக கண்காட்சி போன்று தமிழகம் முழுவதும் புத்தக கண்காட்சி நடத்த உத்தரவிட்டு உள்ளார் மாண்புமிகு முதலமைச்சர்.


அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நூலக துறையின் சார்பில் நீலமங்கலம் கிராமத்தில் அருகே வருகிற 09 தேதி வெள்ளிக்கிழமை முதல் 18ஆம் தேதி வரை 10 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


50க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பக அரகங்கள் அமைக்கப்பட உள்ளது சமுதாயத்தை அறிவார்ந்த நிலையில் உயர்த்த புத்தகம் வாசிப்போம் இவற்றின் தமிழ் மொழி இலக்கியம் மரபுகள் கொண்ட சேர்ப்பதற்காக  இது போன்ற புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் இதன் மூலம் தெரிவித்தார்.


இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தார்ஜான் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது சுரேஷ் இணை இயக்குனர் வேளாண்மை வேல் விழி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிப்பாளர் மீனா அருள் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad