மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்குமா ?
கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தியூர் -அண்ணா நகர் மெயின்ரோட்டின் நடுவே குடிநீர்க் குழார் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பள்ளத்தினால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. இந்த இடத்தில் இரவு நேரங்களில் பயணிக்கும்போது சாலையின் பள்ளத்தின் இருபுறமும் கற்கள் வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கிறனர்.
இந்த நிலைமை நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் எனவும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment