கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 11 July 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதரார்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., தலைமையில் ஒவ்வொரு வார புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் காவல்நிலையங்களில் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு காணமுடியாத 37 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். 


இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மகேஷ், தேவராஜ், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள்,மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் மனுதாரர்கள் பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad