கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வாகனங்களை வாருடாந்திர ஆய்வு - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 28 January 2023

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வாகனங்களை வாருடாந்திர ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை வாகனங்களை வாருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.


இன்று 28.01.2023-ந் தேதி 08.00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கள்ளக்குறிச்சி காவல்துறையினரின் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் வாருடாந்திர ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்தார். குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சீர் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், நாம் பொது மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.


இந்த வாகன ஆய்வின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவஹர்லால் , துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ரமேஷ் மற்றும் திரு.திருமேணி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சண்முகம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திரு.இளையராஜா மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் திரு.முத்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad