சங்கராபுரம் மற்றும் புதுப்பட்டு துணைமின்நிலையப் பகுதிகளில் நாளை மின்விநியோகம் தடை - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 December 2022

சங்கராபுரம் மற்றும் புதுப்பட்டு துணைமின்நிலையப் பகுதிகளில் நாளை மின்விநியோகம் தடை

சங்கராபுரம் மற்றும் புதுப்பட்டு துணைமின்நிலையப் பகுதிகளில் நாளை மின்விநியோகம் தடை.


கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் துணைமின் நிலையப் பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற உள்ளது. 

 

இதனால்  சங்கராபுரம்,பாண்டலம், வட சிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், இராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ் வி பாளையம், கள்ளிப்பட்டு,கொசப்பாடி, ஜவுளிக்குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி மற்றும் கூடலூர் உள்ளிட்ட கிராமங்களில் நாளை(27 12 2022) காலை 9.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை மின்விநியோகம் இருக்காது.



அதேபோல் புதுப்பட்டு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நாளை நடைபெறுவதால் புதுப்பட்டு,இரங்கப்பனூர், மூலக்காடு,கொடியனூர் ,பவுஞ்சிப்பட்டு, இன்னாடு,புத்திராம்பட்டு, மல்லாபுரம் மற்றும் இராவுத்தநல்லூர் ஆகிய கிராமங்களில் நாளை(27 12 2022) காலை 9.00 மணிமுதல் 2.00 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சங்கராபுரம் செயற்பொறியாளர் ட்டி ரகுராமன் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர் பார்த்திபன்.

No comments:

Post a Comment

Post Top Ad