திருவெண்ணெய்நல்லூர் அருகே அதிமுக பொன் விழா: மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 18 October 2022

திருவெண்ணெய்நல்லூர் அருகே அதிமுக பொன் விழா: மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி.

திருவெண்ணைநல்லூர் அருகே  அண்ணா திமுகவின் 51 வது பொன் விழாவை தெற்கு மாவட்ட செயலாளர் இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த இருவல்பட்டு மெயின் ரோடு பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51 வது பொன் விழாவை ஒன்றிய கவுன்சிலர் ஆடிட்டர்மான இருவேல் பட்டு ராஜீவ் காந்தி தலைமையில் விழா நடைபெற்றது.

இதில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் நியமிக்கப்பட்டுள்ள வேங்கையன், வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அதிமுக முன்னோடியும் முன்னாள் முதலமைச்சரமான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருஉரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


இதை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகம் வழங்கினார், தொடர்ந்து அரசூர் நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார், அப்பொழுது பேரையூர் துரைசாமி கண்ணாரம்பட்டு கிருஷ்ணன் ராஜீவ் காந்தி கண்ணாரம்பட்டி சேட்டு சக்திவேல் பாக்யராஜ் ராமலிங்கம் ராமநாதன் ஒன்றிய இளைஞர் பாசறை சேதுபதி மகளிர் அணி சுகந்தி உத்ரா லோகநாயகி ஜோதி உளுந்தூர்பேட்டை பரமசிவம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


- கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் பார்த்திபன். 

No comments:

Post a Comment

Post Top Ad