கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மிஸ் கூவாகம் திருநங்கை அழகிப்போட்டி இந்தாண்டும் கோலாகலமாக விழுப்புரத்தில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களும் வெளிநாடுகளும் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில், கோயம்புத்தூரை சேர்ந்த சூர்யா சிறந்த தோற்றம், நம்பிக்கைமிகு நடை, மற்றும் திறமையான வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் முதல் இடத்தைப் பெற்று மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார்.
இரண்டாம் இடத்தை மலேசியாவை சேர்ந்த நிஷா பெற்றார். அவரின் தனித்துவமான நடையும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அணிவகுப்பும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
மூன்றாவது இடத்தை புதுச்சேரியை சேர்ந்த அனன்யா பெற்றார். இவரின் ஆற்றலும் மேடை நடிப்பும் பாராட்டுகளை பெற்றது.
இந்த நிகழ்ச்சி திருநங்கைகளின் சமூக முன்னேற்றத்தையும், அவர்களின் திறமைகளையும் வெளிக்கொணரும் முக்கியமான மேடையாக திகழ்கிறது. பலரும் திரளாக கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சி முழுவதும் உற்சாகம் நிறைந்ததாகவும், சமத்துவம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவும் அமைந்தது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.


No comments:
Post a Comment