கள்ளக்குறிச்சி, அக். 11 -
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் இன்று (10-10-2025) புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி, புதிய பயணியர் நிழற்குடை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
காலை 9.00 மணியளவில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க. கார்த்திகேயன் B.Sc, MLA அவர்களால் திறந்துவைத்து, கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து உற்சாகமாக நடைபெற்றது. ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி R.M.S.K அர்ச்சனா காமராஜன் தலைமையிட்டு நிகழ்வை நடத்தியார்.
சிறப்பு விருந்தினர்கள்:
-
B.N.R. அசோக்குமார், BE.ML, ஒன்றிய கழக செயலாளர்
-
அஞ்சலை கோவிந்தராஜ், ஒன்றிய துணை பெருந்தலைவர்
-
அஸ்வினி செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர்
அரசு அதிகாரிகள்:
-
வெங்கடேசன், வருவாய் வட்டாட்சியர், வானாபுரம்
-
P. ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்
-
ராதா கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் - கிராம ஊராட்சி
-
ஹரி கிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர்
-
N.நேரு, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்
-
பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர்
-
V. விருத்தம்பால் பச்சையாப்பிள்ளை, ஊராட்சி மன்ற துணை தலைவர்
மேலும், கணினி உதவியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், ஊராட்சி மன்ற பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டனர், ஊராட்சி செயலர் S. திருமால்வளவன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- GB. குருசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment